Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆத்தாடி... வைரமுத்துவின் பாடலை பாடிய பவதாரிணி

ஆத்தாடி... வைரமுத்துவின் பாடலை பாடிய பவதாரிணி
, புதன், 7 மே 2014 (16:53 IST)
ஆடு பகையாம் குட்டி உறவாம் என்ற கிராமத்து பழமொழிதான் நினைவு வருகிறது. இளையராஜாவும், வைரமுத்துவும் பல வருட பகையை இன்றும் பிடிவாதமாக பராமரித்து வருகிறார்கள். வைரமுத்து பலமுறை தனது சாகஸ மொழியில் அழைப்பு விடுத்தும் இளையராஜா அவருடனான பகையை முறித்துக் கொள்ள முன்வரவில்லை.
இப்படியொரு நிலையில் இடம் பொருள் ஏவல் படத்தில் யுவன் இசையில் பாடல் எழுதும் பேறு பெற்றார் வைரமுத்து. பேறு என்று எழுத காரணம், இளையராஜாவின் மகனுடன் தான் இணைந்தது போல் இளையராஜாவும் தனது இசையில் பாடல் எழுத தனது மகன்கள் மதன் கார்க்கி, கபிலன் ஆகியோருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று பகிரங்கமாகவே சிபாரிசு செய்தார் வைரமுத்து. ஆனால் இளையராஜாவிடம் வழக்கம் போல் எந்த எதிர்வினையும் இல்லை. வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு இளைராஜாவிடம் எந்த விலையும் இல்லை. 
 
இந்நிலையில் அடுத்த ஆச்சரியம். வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடியுள்ளார்.
 
கே.வி.ஆனந்தின் அனேகன் படத்தில் இடம்பெறும் ஆத்தாடி என்ற பாடலை பவதாரியை பாட வைத்து ஒலிப்பதிவு செய்துள்ளார் ஹாரிஸ். இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து. 
 
வாரிசுகளை வைரமுத்துவால் நெருங்க முடிந்தாலும் அவரால் எட்டிப் பிடிக்க முடியாத தொலைவில்தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார் இளையராஜா.

Share this Story:

Follow Webdunia tamil