Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவர் மிகவும் வெளிப்படையானவர்

அவர் மிகவும் வெளிப்படையானவர்
, புதன், 21 மே 2014 (13:17 IST)
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசக் கூடியவர் என்று பெயர் எடுத்து வருகிறார் நடிகர் சூரி. 
சமீபத்தில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். விமல் நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். 
 
இதில் சூரிக்கு காமெடி கேரக்டர்தான் என்றாலும் ஹீரோவுக்கு இணையாக இருக்குமாம். இப் படத்தை இயக்குனர் கண்ணன் இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது ’ நடிக்கும் போதே சிரிப்பு 
வரவேண்டாமா..?’ சில காமெடி காட்சிகள் கொஞ்சம் சுமாராக இருக்கிறது. என்று சொல்லி ’சில மாற்றங்களை செய்யலாமா..?’ என்று கேட்டிருக்கிறார் சூரி.

அதற்கு இயக்குனர் சம்மதிக்காமல் ’பரவாயில்லை இருக்கட்டும்’ என்று சமாதானப்படுத்தி இருக்கிறார்.
ஆனாலும், மனசு கேட்காமல் அன்று மாலையே தயாரிப்பாளரிடம் இது பற்றி எடுத்து கூற, தயாரிப்பாளர் கண்ணனை அழைத்து ’சூரி சொல்வது போல் சின்ன மாற்றம் செய்து கொள்ளுங்கள்’ என்றிருக்கிறார். தற்போது சில காட்சிகள் மாற்றி எடுக்கப்பட்டு வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil