இவர்கள் இருவரும் இரும்புக்குதிரை படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பின் போது அதர்வாவும், ப்ரியா ஆனந்தும் காதலில் விழுந்ததாக படயூனிட்டே உடுக்கடித்தது. மீடியாக்களிலும் இது செய்தியானது. இதனை இதுவரை அதர்வாவோ, ப்ரியா ஆனந்தோ மறுக்கவில்லை.
இந்நிலையில் திடீரென்று இந்த காதல் வதந்தி முற்றிலும் பொய் என்று கூறினார் ப்ரியா ஆனந்த்.
படப்பிடிப்பில் அதர்வாவும், ஒளிப்பதிவாளர் அமர்நாத்தும், நானும் ஒன்றாக அமர்ந்து அரட்டையடிப்போம். அதர்வா ரொம்பவும் டீசன்டானவர். எங்களுக்குள் காதல் எல்லாம் இல்லை. அப்படி வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என கூறினார்.
ப்ரியா ஆனந்துக்கு எதிர்நீச்சலுக்குப் பின் வாய்ப்புகள் கொட்டுகின்றன. வை ராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாகவும், அரிமாநம்பியில் விக்ரம் பிரபு ஜோடியாகவும், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் விமலுடனும் நடித்து வருகிறார். இப்போதைக்கு சினிமாவில்தான் என்னுடைய கவனம் என்றும் கூறினார்.