படத்தின் அறிவிப்பை வெளியிடும் போதே எடுக்கப் போற படத்தின் கதையையும் சொல்லிவிடுவது எஸ்.ஜே.சூர்யாவின் ஸ்டைல். இசை படத்தின் கதையையும் வெளியிட்டு கோடம்பாக்கத்தை அலறவிட்டிருக்கிறார் மனிதர்.
தனது உழைப்பாலும் திறமையாலும் இசைத்துறையில் உச்சத்துக்கு வரும் துடிப்பான இளைஞனுக்கு சக இசையமைப்பாளர் தரும் தொல்லைதான் இசை படத்தின் கதையாம்.
இந்த ஒன் லைனுக்கே பல இசையமைப்பாளருக்கு நம்ம கதைதானோ என உதறலெடுத்திருக்கிறது.
இசை படத்தின் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் ரஹ்மானை சந்தித்து ஆசி வாங்கினாராம் சூர்யா. அப்போது ரஹ்மான் ஏனிந்த வீண் வேலை என்று சூர்யாவை எச்சரித்ததாக கேள்வி.
கதையையும் இந்த சந்திப்பையும் வைத்து ரஹ்மானின் கதையைதான் சூர்யா எடுக்கப் போகிறார் என்கிறார்கள். அப்படியானால் அந்த குடைச்சல் தரும் இன்னொரு இசையமைப்பாளர்?