Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்நிதி நடிக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (15:02 IST)
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்துவரும் படம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் 
 
படத்தின் பெயரிலிருந்தே இதுவொரு நகைச்சுவைப் படம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
எந்த குற்றமும் நடக்காத ஒரு கிராமத்தில் ஒரு காவல் நிலையமும், நாலு போலீசாரும் இருக்கிறார்கள். நாலில் ஒருவர் நாயகன் அருள்நிதி. எந்த குற்றமும் நடக்காத அந்த ஊரில் பிரச்சனை ஒன்று வரும்போது என்னாகிறது நிலைமை என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
 
அறிமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா எழுதி இயக்குகிறார். அருள்நிதியுடன் நடிப்பது ரம்யா நம்பீசன். இசையமைப்பாளர் ரஜின் என்ற புதுமுகம். சிங்கம்புலி, ராஜ்குமார் இவர்களுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பகவதி பெருமாளும் நடித்துள்ளார்.
 
சமீபத்தில் படத்தின் டைட்டில் டிசைனை வெளியிட்டனர். இந்த டிசைனே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments