Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மா அப்பா பெயரை பச்சைக் குத்திக் கொண்ட ரஜினி மகள்

அம்மா அப்பா பெயரை பச்சைக் குத்திக் கொண்ட ரஜினி மகள்
, வியாழன், 10 ஜூலை 2014 (10:48 IST)
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா லதா ரஜினி என்று தனது அம்மா, அப்பா பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.
சௌந்தர்யாவுக்கு தனது தந்தை ரஜினியின் மீதுள்ள பாசம் அனைவரும் அறிந்ததே. ரஜினியை வைத்து 125 கோடியில் பெர்பாமென்ஸ் கேப்சர் தொழில் நுட்பத்தில் கோச்சடையான் எடுத்த பிறகு இந்த பாசம் முன்பைவிட அதிகரித்தது. ரஜினியின் மகளாக இல்லாமலிருந்தால் முதல் படத்திலேயே 125 கோடி செலவழிக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன் வந்திருக்காது, ரஜினியும் நடித்திருக்க மாட்டார்.
 
மேலும், திருமணத்துக்குப் பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் என்றே தனது பெயரை சௌந்தர்யா குறிப்பிட்டு வருகிறார். திருமணத்துக்கு முன் பெயருடன் அப்பா பெயரை இணைத்துக் கொள்கிறவர்கள், திருமணத்துக்குப் பின் அப்பாவின் இடத்தில் கணவனின் பெயரை போட்டுக் கொள்வதே மரபு. ஆனால் ரஜினி சௌந்தர்யாவின் தந்தை மட்டுமின்றி அவரின் அடையாளமும்கூட. கோச்சடையான் பிரஸ்மீட்டில் இது குறித்து கேட்கப்பட்ட போது, ஐஸ்வர்யா ராய் தனது திருமணத்துக்குப் பிறகும் ஐஸ்வர்யா ராய் பச்சான் என்று தனது தந்தைப் பெயர் ராயை சேர்த்துக் கொண்டிருக்கிறாரே... அவரிடம் ஏன் இது மாதிரி கேள்வி கேட்கவில்லை என்று திருப்பி கேட்டார் சௌந்தர்யா அஸ்வின்.
 
(ராய் என்பது ஐஸ்வர்யா ராயின் தந்தை பெயர் இல்லை. அது குடும்பப் பெயர். சரியாகச் சொன்னால் சாதிப் பெயர்)
 
இந்நிலையில் தனது பெற்றோர் மீதான பாசத்தின் வெளிப்பாடாக லதா ரஜினி என தனது கையில் பச்சைக் குத்தியுள்ளார் சௌந்தர்யா அஸ்வின். இதேபோல் குஷ்புவும் தனது குழந்தைகளின் பெயரை கையில் பச்சைக் குத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil