Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மாவை மட்டும் அழைச்சிட்டு வரக்கூடாது - பிரேம்ஜி போட்ட கண்டிஷன்

அம்மாவை மட்டும் அழைச்சிட்டு வரக்கூடாது - பிரேம்ஜி போட்ட கண்டிஷன்
, சனி, 3 மே 2014 (19:31 IST)
பிரேம்ஜியின் குறும்பு கோடம்பாக்கத்தில் கொடி கட்டி பறக்கிறது. பப்ளிக்காக பகடி செய்வதில் பிரேம்ஜி மாஸ்டராகி வருகிறார்.
என்னமோ நடக்குது படத்துக்கு இவர்தான் இசை. இளையராஜா பாடல்களை காப்பியடித்து இசை போடுவதுபோல் இவரும் படக்குழுவும் சேர்ந்து திருட்டு இசை என்று ஒரு வீடியோவையே வெளியிட்டனர். இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்த படத்தின் நாயகி மிகிமா, நானும் ரம்யா நம்பீஸன் மாதிரி நல்லா பாடுவேன், பிரேம்ஜி எனக்கும் வாய்ப்பு தரணும் என்றார். 
 
பிடித்தது கரண்ட் கம்பியை என்பது மிகிமாவுக்கு உடனேயே புரிந்தது.
 
மிகிமாவின் வேண்டுகோளுக்கு பதிலளித்த பிரேம்ஜி, ரெக்கார்டிங் தியேட்டருக்குள் உன் அம்மாவை எக்காரணம் கொண்டும் அழைத்து வரக்கூடாது. அதற்கு சம்மதித்தால் வாய்ப்பு தர நான் தயார் என்றார். 
 
தனது அழுகிப்போன... ச்சே, அழகான சிரிப்பை வைத்து ஆபத்தான டயலாக்குக்கும் சிரிக்க வைத்துவிடுகிறார் பிரேம்ஜி.

Share this Story:

Follow Webdunia tamil