Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமரகாவியம் ஜீவா சங்கரின் இரண்டாம் வகுப்பு அனுபவம்

அமரகாவியம் ஜீவா சங்கரின் இரண்டாம் வகுப்பு அனுபவம்
, செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (18:25 IST)
அமரகாவியம் படத்தை இயக்கியிருக்கும் ஜீவா சங்கரின் முதல் படம் விஜய் ஆண்டனி நடித்த நான். அந்தப் படம் ஒரு வெளிநாட்டுப் படத்தின் (The Talented Mr. Ripley) தழுவல்.
இவரது இரண்டாவது படம் அமரகாவியம் இரு கொரிய படங்களின் கூட்டுத் தழுவல் என தகவல் உள்ளது. இந்தத் தகவல் வெளியானதிலிருந்து, அமரகாவியம் சொந்தச் சரக்கு என்பதை நிலைநாட்டும் வேலையில் இறங்கினார் ஜீவா சங்கர்.
 
1982 -83 -இல் அவர் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்தான் அமரகாவியம் படத்தின் கிளைமாக்ஸாம். கிளைமாக்ஸ் மட்டுமின்றி படத்தின் முக்கால்வாசி காட்சிகள் உண்மைச் சம்பவம் என்று கரடி விட்டுள்ளார். 
 
படம் வெளியாகி, கொரிய படத்தின் தழுவல் என்று இணையத்தில் பிரித்து மேய்வதிலிருந்து தப்பிக்கவே இந்த நிஜக்கதை உட்டாலக்கடியை ஜீவா சங்கர் கையிலெடுத்துள்ளார். கதை பண்றதில் இந்த சாமர்த்தியத்தை காட்டலாமே பாஸ்.
 

Share this Story:

Follow Webdunia tamil