Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்தரி புலி பேரச் சொன்னா... அசத்தும் அஞ்சான் ஓபனிங் சாங்

அந்தரி புலி பேரச் சொன்னா... அசத்தும் அஞ்சான் ஓபனிங் சாங்
, செவ்வாய், 10 ஜூன் 2014 (12:15 IST)
ஆக்ஷன் படங்களின் சண்டைக் காட்சிகள் அரிவாளின் கூர்மை என்றால் அந்த அரிவாளின் முனையில் செருகி வைக்கும் எலுமிச்சைதான் ஓபனிங் சாங். அஞ்சானின் ஓபனிங் பாடலில் யுவனும், மதன் கார்க்கியும் இணைந்து பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.
லிங்குசாமியின் அஞ்சான் மும்பை கதைக்களத்தில் உருவாகிறது. மும்பை தாதாவாக வருகிறார் சூர்யா. அவரது பெயர் ராஜு பாய் என்று தெரிகிறது. ஓபனிங் பாடல் வரிகளில் அந்தப் பெயர்தான் வருகிறது. சூர்யாவின் அறிமுகப் பாடலான இதனை மிகச்சிறப்பான டியூனில் பொருத்தியிருக்கிறார் யுவன். பாடல் எழுதியிருப்பவர் மதன் கார்க்கி. 
 
எந்தத் தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்
 
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்
 
இங்க அப்பப்ப அங்கங்க தீப்பத்திக்குமே
 
ஓர் ஆபத்தில் அவன் பேரு காப்பாத்துமே
 
அந்தேரி புலி பேரச் சொன்னா அடி நெஞ்சிலே
 
பேங் பேங் பேங்!
 
ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே
 
பேங் பேங் பேங்!!
 
ராஜு பாய் வந்து முன்னால நின்னா
 
பேங் பேங் பேங்!!!
 
- இது பாடலின் ஆரம்பம். சரணத்தில் இன்னும் அதிரடியான வார்த்தைகளைப் போட்டு ரணகளமாக்கியிருக்கிறார்கள்.
 
ஆகஸ்ட் 15 அஞ்சான் திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil