Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 2 வெளியாகும் எஸ்.ஜே.சூர்யாவின் இசை

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2014 (11:29 IST)
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று எஸ்.ஜே.சூர்யாவின் இசை வெளியாகிறது.
வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை எழுப்பிய எஸ்.ஜே.சூர்யா, தனது நடிப்பாசையால் பெயரையும், புகழையும் அவராகவே கெடுத்துக் கொண்டார். ஆனாலும் மனிதர் அசருவதாக இல்லை. அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இசையமைத்து நடித்திருக்கும் இசை படம் வரும் அக்டோபர் 2 வெளியாகிறது.
 
இரண்டு இசையமைப்பாளர்களைப் பற்றிய இந்தப் படம் ரஹ்மான், இளையராஜாவை ஞாபகப்படுத்துவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இளையராஜாவை விமர்சிக்கும் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று பிரகாஷ்ராஜ் விலகிக் கொள்ள, அந்த வில்லன் வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். சாவித்ரி என்ற புதுமுகம் ஹீரோயின்.
 
இந்தப் படத்தை அக்டோபர் 2 -ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியிட சூர்யா முடிவு செய்துள்ளார். இந்த மாதம் பாடல்களை வெளியிடுகின்றனர்.
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments