Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபர் 2 வெளியாகும் எஸ்.ஜே.சூர்யாவின் இசை

அக்டோபர் 2 வெளியாகும் எஸ்.ஜே.சூர்யாவின் இசை
, திங்கள், 1 செப்டம்பர் 2014 (11:29 IST)
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று எஸ்.ஜே.சூர்யாவின் இசை வெளியாகிறது.
வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை எழுப்பிய எஸ்.ஜே.சூர்யா, தனது நடிப்பாசையால் பெயரையும், புகழையும் அவராகவே கெடுத்துக் கொண்டார். ஆனாலும் மனிதர் அசருவதாக இல்லை. அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இசையமைத்து நடித்திருக்கும் இசை படம் வரும் அக்டோபர் 2 வெளியாகிறது.
 
இரண்டு இசையமைப்பாளர்களைப் பற்றிய இந்தப் படம் ரஹ்மான், இளையராஜாவை ஞாபகப்படுத்துவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இளையராஜாவை விமர்சிக்கும் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று பிரகாஷ்ராஜ் விலகிக் கொள்ள, அந்த வில்லன் வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். சாவித்ரி என்ற புதுமுகம் ஹீரோயின்.
 
இந்தப் படத்தை அக்டோபர் 2 -ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியிட சூர்யா முடிவு செய்துள்ளார். இந்த மாதம் பாடல்களை வெளியிடுகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil