Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போனவர்களை கவர்ந்து வரும் வெங்கட்பிரபு

Webdunia
வியாழன், 12 ஜூன் 2014 (12:55 IST)
காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்த ராம்கியை தேடிப் பிடித்து பிரியாணியில் நடிக்க வைத்தார் வெங்கட்பிரபு. கொஞ்சம் பழசான பிரியாணியாக படம் தோன்றியதற்கு ராம்கியின் பங்களிப்பும் சிறிது உண்டு.
காணாமல் போனவர்கள் மீதான வெங்கியின் பிரேமை அடுத்தப் படத்திலும் தொடர்கிறது.
 
ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். இது காமெடி ஹாரர் படம் என்றும் படத்துக்கு பூச்சாண்டி என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் உலவுகிறது.
 
இந்தப் படத்தில் முன்னாள் வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருகாலத்தில் ஓஹோவென்றிருந்த மோகன் இன்று தமிழ் சினிமாவின் ஞாபக அடுக்குகளில் மட்டுமே இருந்து வருகிறார். சினிமா ஆசையில் அவர் நடித்த சுட்டப்பழம் சரியாகப் போகவில்லை என்பதுடன் ஒரு புதுமுகத்துக்கான வரவேற்பும்கூட கிடைக்கவில்லை.
 
இந்நிலையில் அவரை தனது படத்தில் வெங்கட்பிரபு நடிக்க வைக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments