Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கதேசத்தில் முதல் பன்றிக் காய்ச்ச‌ல் பலி

வங்கதேசத்தில் முதல் பன்றிக் காய்ச்ச‌ல் பலி
டாக்கா: , திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (15:03 IST)
பன்றிக் காய்ச்சலிற்கு இந்தியாவில் இன்று காலை வரை 95 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அண்டை நாடான வங்கதேசத்தில் அக்காய்ச்சலிற்கு முதல் முதலாக ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தியாவைப் போல வங்கதேசத்திலும் விரைவாக பரவிவரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 35 வயதான பெண் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார் என்று அந்நாட்டு பொது நல அமைச்சர் ரூகுல் ஹேக் கூறியுள்ளார்.

டாக்காவிலுள்ள குடிசைப் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்றும், காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு விழி்ப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படு்மென்றும் அமைச்சர் ஹேக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil