எளிதில் செய்யலாம் அரிசி பாயாசம்; எப்படி..?

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:21 IST)
தேவையான பொருள்கள்:
 
பாஸ்மதி அரிசி - 1/4 கப் 
பால் - 4 கப் 
நெய் - 1/4 கப் 
சீனி - 3/4 கப் 
முந்திரிப்பருப்பு - 1/4 கப் 
காய்ந்த  திராட்சை - 10
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 
செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராடசை இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி   கொதிக்கவிடவும்.
 
கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து இடையிடையே கிளறி விடவும். அரிசி நன்கு வெந்து பால் பாதியாக குறைந்ததும்  சீனியை சேர்த்து  நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். இறுதியில் நெய், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம்  கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான அரிசி பாயாசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?!.. மிஸ் பண்ணாதீங்க..

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments