Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலைப் பருப்பு சுழியம்

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2010 (13:15 IST)
தேவையானப் பொருட்கள்:

கடலைப் பருப்பு - 1/4 கிலோ
தேங்காய் துறுவல் - 1 கப்
வெல்லம் சுவைக்கேற்ப
மைதா மாவு தேவைக் கேற்ப
ஏலப்பொடி
உப்பு

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை நீர் ஊற்றி பதமாக வேக வைக்கவும்.

பிறகு நீரை கடிகட்டி மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும்.

பின்னர் அதில் தேங்காய் துறுவல், வெல்லம், ஏலப்பொடி, உப்பு முதலியவற்றை போட்டு கையால் கலக்கவும்.

அதன்பின்னர் இக்கவலவையை ஒரு வாணலியில் இட்டு சூடுபடுத்த வேண்டும்.

கலவை கெட்டியாக வரும்போது இறக்கி சிறு சிறு உருண்டடைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் மைதாவை தண்ணீர் விட்டு கரைத்து, அதில் பிடித்து வைத்துள்ள கடலைப்பருப்புக் கலவை உருண்டைகளை பஜ்ஜி போடுவது போல் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments