கல்கண்டு வடை என்பது ஒரு புதிய ரக இனிப்பு வகையாகும். கல்கண்டை சாதாரணமாக சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். அதை புதுவிதமாக வடையில் சேர்த்து கல்கண்டு வடையாக சாப்பிடுகையில் அதன் சுவை அற்புதமாக இருக்கும்.
தேவையானவை
உளுத்தம்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
கல்கண்டு - 1 கப்
எண்ணெய் - தேவைககேற்ப
செய்முறை:
உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து வடை பதத்திற்கு அரைக்கவும்.
நன்கு நைஸாக அரைப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள்.
எண்ணெயை மிதமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.