Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூமணியின் `பிறகு' - நாவலை முன்வைத்து. . . - ஆர். முத்துக்குமார்

பூமணியின் `பிறகு' - நாவலை முன்வைத்து. . .                                                  - ஆர். முத்துக்குமார்

Webdunia

இதுபோன்ற எல்லா இடங்களிலும் சக்கிலியக்குடியின் தன்னிலை others Discouse-Mf Contain Ment - க்குள் அடைந்து வருகிறது. ஆனாலும் இதற்கு எதிராக சில காட்சிகளில் அழகிரிப்பகடை என்ற சக்கிலியரே பேசுகிறார். இதை நாம் ஞரசந னபைநளளை என்று கூறலாம். உதாரணமாக :

ஊரில் புஞ்சை விளைய ஆரம்பிக்கிறது. கூலிக்கு ஆள் நிறையபேர் தேவைப்பட்டனர் : `விடியக்காலையில் சக்கிலியக்குடியிலும் மம்பட்டித் தட்டும் சத்தங்கள் கேட்டன. சம்சாரிகளிடத்தில் பகடைகள் தண்ணீர் பங்கு சேர்த்தார்கள், ஆணும் பெண்ணும் நிலங்களில் கிடந்ததைப் பார்க்க நேரும் போது அழகிரி வேம்படியில் முனங்கிக் கொள்வான்!

இந்த ஆசிரியகுரல் Digesis-ற்கு அடுத்தபடியா

`என்னத்த கெட்டி அள்ளப் போறாங்களோ'

அழகிரியையும் பங்கு சேரக் கூப்பிட்டார்கள் - அதற்கு அழகிரி "அதுக்காக இந்த ஊர் தேடி வரல சாமி, எனக்கு தந்தொழிலப் பாத்தா, வகுத்து மொற கழியும்" என்ற பகுதியிலும், மேலும் தீவிரமாக பக் - 75 ல் அழகிரிப் பகடை மாடசாமி என்பவன் வீட்டிற்கு ஒரு `ஏனம்' வாங்க வருகிறான். அப்போது மாடசாமி மனைவியை, `சுப்பையா' என்ற பெரும்புள்ளி பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அழகிரிப்பகடை கதவை தட்டி சுப்பையாவை விறகால் அடித்து விரட்டி விட்டு, அழகிரிப்பகடை தன் சொந்தக் குரலிலேயே பேசுகிறான் : "சீ மானங்கெட்ட கழுத, அடங்காப்பெடாரி, ஒன்னப்போயி தாலிகட்டி இழுத்துவந்திருக்கான்பாரு. அவன் ஒரு சாரங்கெட்ட பய, மூன்று நேரமும் தின்னாப்போதும் போல... கடசிக்கு இந்தக் கோலமா பண்ணீட்ட"(பக் - 75 ல)

மேற்சொன்ன இரண்டு பகுதிகள், ஒன்று தன் தொழிலே தனக்குப் போதுமானது, மற்றும் மாடசாமியின் மனைவியை, காசுக்காக பாலியல் தொழிலுக்கு ஆட்படுகிறாள் என்ற வகையின் போதும் அழகிரிப்பகடை - என்ற சக்கிலியத்தன்னிலையின் குரல் Pure Digesis ஆக வருகிறது.

ஆனால் இந்த இரண்டு இடங்கள் மட்டுமல்ல ஒரு உதாரணத்திற்கு இவைகள், கதை நெடுக சக்கிலியக்குடி என்ற தன்னிலையின் குரல், மற்றவர்களின் சொல்லாடலாக வராமல் வரும் இதுபோன்ற மிகவும் அரிதாக வரும் பகுதிகள் எல்லாமே சக்கிலியக் குடியின் தன்னிலை தன்னை ஆடிசயட னுளைஉடிரசளந - ஆகவே வெளிப்படுத்துகிறது.

பூமணியின் `பிறகு' - நாவலை முன்வைத்து. . .
- ஆர். முத்துக்குமார


ஆகவே நடையியல் அணுகுமுறையிலிருந்து நமக்கு இரண்டு விஷயங்களே கிடைக்கிறது. சக்கிலியக்குடியின் தன்னிலை others Discoure - ஆக ஆசிரியரின் குரல், இடையீடு பிரதிநிதித்துவமாகவும், சுய - பிரதிநிதித்துவம் செய்யும் பகுதிகள் ஒழுக்கவாத சொல்லாடலாகவும் வருகிறது. இந்த பிரதியில் தன்னிலை டிவாநசள others discourse / moral discoure என்ற இருமை எதிர்வினை அடியில் சரிந்து விடுகிறது.

ஹைகல், மார்க்ஸ் முதல் தற்போது லகான் வரையிலும் அன்னியமாதல் பற்றி பேசியிருக்கின்றனர். லகான் கூறுகிறார் "நான் அல்லது நாம் என்பதே மற்றவர்களின் சொல்லாடலால் கட்டமைக்கப்படுவதே" என்று அதாவது மற்றவர்கள் நம்மை `நீ' என்று விளிக்கத் துவங்கும் போதுதான் நாம் சமூகத்திற்குள் நுழைகிறோம், ஆகவே எல்லாத்தன்னிலைகளும், `subject of Enunciation' என்றும் ஆசை என்பதே மற்றவர் நம்மேல் project செய்யும் ஆசை என்றும் கூறுகிறார். இந்த மற்றவர்களை, மற்றதை நாமாக வரிந்து கொள்வதுதான் லகான் கூறும் `IMAGINARY' அல்லது அல்தூர் கூறும் ideolofical Mis - Recognition) இவையெல்லாம் சரியே.. இந்த `மற்றது' என்ற சுழல்பாதையிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது? இங்குதான் லகான் `speech' என்பதை எழுப்புகிறார். `பேச்சு' என்பது என் ஆசை என் இச்சை. சம்பந்தப்பட்டது, இதன் location தான் unconcious என்ற Other, இந்த Other - ன் பேசும் தன்னிலையாக - இச்சா சக்தி தன்னிலையாக வெளிப்படுத்தப்படுவதுதான் `அன்னியமாதலிலிருந்து' தப்பிக்க ஒரே வழி.

ஆகவே, சாதியத்தன்னிலைகள் subject of enunciation - ஆக அன்னியமாயிருக்கின்றனர். இதிலிருந்து மீள அவர்களின் `பேச்சு' - நனவிலி தயி ஆசையாக வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இங்கு pure digesis - என்பது `தன்னிலையின் பேச்சு' என்பதாக கதையாடல் அமைக்கப்படவேண்டும் எனக் கூறுகிறேன். அதாவது ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு உளப்பகுப்பாய்வாளியாக மாறினால்தான் இது சாத்தியம். அப்போதுதான் moral discouse - ஆக வரும் `தன்னிலையின் குரல்' என்பதிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.

மீண்டும் ஒருமுறை கட்டுரையின் முன்பகுதியில் குறிப்பிட்டதை நினைவு படுத்த விரும்புகிறேன் : `Representative realism' மும் Representative Democracy' போலவே அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல், குரல்களின் பிரதிநிதித்துவம் செய்யும். இதை `subvert' செய்ய லகானின் `speech' என்பதையே படைப்பாளிகள் எழுப்ப வேண்டும். இன்றைய `தலித்' படைப்பாளிகளின் பொறுப்புணர்வும் அதில்தான் அடங்கி இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil