கணவனை இழந்த ஒரு பெண் கணவனின் கல்லறை அருகே அழுது கொண்டிருந்தாள், அப்போது அவளை ஒரு கனவான் அணுகினான், மிகுந்த மரியாதையான நடத்தையுடன் அவன் அவளிடம் அதிமென்மையான உணர்வுகளை அவளுக்காக அவன் உற்சாகப்படுத்திவந்ததாக அவளிடம் உறுதியளித்தான்.
" ஈனனே!" உடனே இங்கிருந்து போய்விடு, இந்தக் கணத்தை என்னிடம் விட்டுவிடு; காதல் பற்றி என்னிடம் பேசுவதற்கு இதுவா தருணம்? என்று அவள் அந்த கனவானை கடுமையாக சாடினாள்.
" நான் உங்களிடம் எனது நேசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் அதைக்கூறவில்லை என்று உறுதியாக கூறுகிறேன், என்று மிகவும் நிதானமாக பதிலளித்த அந்தக் கனவான், "ஆனாலும் எனது விருப்பத்தை உங்களது அழகின் சக்தி ஆட்கொண்டுவிட்டது' என்றான்.
" நான் அழாமல் இருக்கும்போது நீ என்னை பார்க்கவேண்டும்" என்றாள் அந்த விதவை.