Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கம் 4 -ஆம் பாகமும் வரலாம் - நடிகர் சூர்யா பேட்டி

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2017 (17:35 IST)
இன்று சிங்கம் 3-ஆம் பாகமான சி3 வெளியாகியுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் விதமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா என வெளிமாநிலங்களுக்கும் சென்று வந்தார் சூர்யா. ஹைதராபாத்தில் அவர் அளித்த பேட்டியின்  தமிழாக்கம் உங்களுக்காக.

 
சிங்கம் படத்தின் 4-ம் பாகம் வருமா?
 
காக்க காக்க படத்தில் நான் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் வரவேற்பை பெற்றது. சிங்கம் படத்தில் போலீஸ் அதிகாரி  வேடம் ஏற்றபோது அதன் இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு சிங்கம் படம் மிகவும் பிடித்து  போனது. அதனால் இப்போது மூன்றாம் பாகம் வரை தயாராகி உள்ளது. 4-ம் பாகத்திலும் நடிக்க ஆர்வம் இருக்கிறது. 4-ம்  பாகமும் வரலாம்.
 
அடுத்து ஹரி இயக்கத்தில் நடிக்கவிருப்பது, சிங்கம் 4 -வது பாகமாக இருக்குமா?
 
டைரக்டர் ஹரி ராணுவ பின்னணியை மையமாக வைத்து ஒரு கதை தயார் செய்து உள்ளார். அதிலும் நான் நடிக்க  இருக்கிறேன்.
 
சிங்கம்-3 படம் உண்மை கதையா?
 
தமிழகத்தில் எம்.ஜி. ஆரும் ஆந்திராவில் என்.டி.ராமராவும் முதல்வர்களாக இருந்தபோது ஆந்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம்  நடந்தது. அப்போது ஆந்திர அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஆந்திர போலீசாருக்கு உதவ தமிழக போலீசார் அனுப்பி  வைக்கப்பட்டனர். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.
 
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்பு உங்களை எதிர்த்ததே?
 
ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். அதை மீட்பதற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. ஒரு தமிழனாக  ஜல்லிக்கட்டுக்கு நான் ஆதரவு கொடுத்தேன். இதுதான் என்னுடைய முகம். முகத்திரை போட்டு இதனை மறைக்க முடியாது.  எனது படத்தை விளம்பரப்படுத்த ஜல்லிக்கட்டுக்கு நான் ஆதரவு தருவதாக பீட்டா அமைப்பு விமர்சித்தது. இதற்காக அந்த  அமைப்பை கண்டித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். பீட்டா அமைப்பு வருத்தம் தெரிவித்து உள்ளது.
 
விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கிறீர்களே?
 
இளம் டைரக்டர்களுடன் வேலை செய்யும்போது நம்மை புதுமையாக காட்டுவார்கள். விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த  கூட்டம் நல்ல கதையம்சம் உள்ள படம்.
 
ஜோதிகா தொடர்ந்து நடிப்பாரா?
 
ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த 36 வயதினிலே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மகளிர்  மட்டும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படம் திருமணமான பெண்களுக்கு புதிய உத்வேகத்தை தரும்.
 
ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பீர்களா?
 
ஒரு வருடத்துக்கு முன்பே ஜோதிகாவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் நடக்கவில்லை. அவர்  மீண்டும் நடிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு முன்னால் ஒரு படத்தில் சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்ற முடிவில்  இருக்கிறேன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

ஓடிடி விற்பனையில் புதிய சாதனை… எந்த தமிழ்ப் படமும் தொடாத உயரத்தைத் தொட்ட ‘தக்லைஃப்’!

சிவாஜி சார் இருந்திருந்தா அவர்தான் அந்த கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார்.. வேட்டையன் பட விழாவில் ரஜினி பேச்சு!

‘ஞானவேல் சார் எனக்கு மெஸேஜ் சொன்னா புடிக்காது’… வேட்டையன் கதை பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

அடுத்த கட்டுரையில்
Show comments