எனக்கு கொரோனா இல்லை, வெறும் உடம்பு வலி மட்டும் தான்: ராதிகா விளக்கம்

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (07:34 IST)
பிரபல நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு என தகவல்கள் வெளிவந்தது. அவர் மீதான செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கூட அவர் ஆஜராகவில்லை என்பதும் அவருக்கு கொரோனா பாதிப்பால் ஆஜராகவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில் சற்று முன் ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா இல்லை என்றும் சாதாரண உடம்பு வலி தான் என்றும் ஆனால் மீடியாக்களில் எனக்கு கொரோனா என்றும் உடல் நலக்கோளாறு என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது என்றும் அது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார் 
 
தான் சமீபத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து தனது உடம்பு வலி மட்டுமே இருந்தது என்றும் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ராதிகா கூறியுள்ளார். மேலும் நாங்கள் நீதிமன்றத்தில் போராடி வருகின்றொம் என்று கூறிய ராதிகா மீண்டும் தனது வழக்கமான பணிகளை தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதிலிருந்து ராதிகாவுக்கு வரும் என்ற தகவல் பொய்யானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments