லிங்குசாமி - நீங்கள் அம்மா பிள்ளையா, அப்பா பிள்ளையா...? சூர்யா - வீட்டுக்கு நான்தான் முதல் பிள்ளை. எப்படி எஸ்கேப் ஆயிட்டேன் பார்த்தீங்களா.
லிங்குசாமி - உங்கள் பெற்றோர் வீட்டில் அதிகம் செல்லம் தருவது உங்களுக்கா, உங்கள் தம்பி கார்த்திக்கா?
சூர்யா - கார்த்திக்குதான் செல்லம். அவன் எப்போதும் அப்பா செல்லம்.
லிங்குசாமி - ரஜினி, கமல் இரண்டு பேரும் இங்கே இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
சூர்யா - ரஜினிசாரும், கமல்சாரும் இருக்கிற சினிமாவில் அவங்களோட நானும் இருக்கிறேங்கிறதே பெருமையான விஷயம். சினிமாவுக்கு வர்ற எல்லோருக்குமே பென்ச் மார்க் அவங்க ரெண்டு பேரும்தான். அவங்க சாதனைகளை அவங்க உடைச்சாதான் உண்டு. வேற யாரும் பிரேக் பண்ணவே முடியாது. தலைக்கு ஏறாத வெற்றி, தளராத உழைப்பு இந்த இரண்டும்தான் அவர்களை உயரத்தில் வச்சிருக்கு.
லிங்குசாமி - உங்க ரசனையில் இதுவரை வந்த தமிழப் படங்களில் டாப் டென் எது? சூர்யா - பராசக்தி, ஆயிரத்தில் ஒருத்தன், முள்ளும் மலரும், தண்ணீர் தண்ணீர், 16 வயதினிலே, நாயகன், பாட்ஷா, மறுபக்கம், சேது, பருத்திவீரன்.
லிங்குசாமி - உங்க நேர்மை பிடிச்சிருக்கு. ஆனா, பத்துல ஒண்ணுகூட உங்க படம் இல்லையே?
சூர்யா - கொடுக்க முயற்சி பண்றேன்.
லிங்குசாமி - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த முதல் படம்?
சூர்யா - ஆயிரத்தில் ஒருவன்.
லிங்குசாமி - உங்களைப் பற்றி வந்ததில் உங்களுக்கு பிடித்த விமர்சனம் எது?
சூர்யா - நேருக்கு நேர் படம் வந்தப்போ உதயத்தில் போய் படம் பார்த்தேன். என்னை யாருக்கும் அப்போ தெரியாது. படம் முடிந்து வந்த சிலர் என்னை அடையாளம் கண்டு படம் சூப்பர், நல்லா நடிச்சிருக்கீங்கன்னு பாராட்டினாங்க. அப்போ ஒருத்தர் வேகமா வந்து ரெண்டு கையையும் பிடிச்சிட்டு, சூப்பரா சொதப்பியிருக்கீங்க, அடுத்தப் படத்திலயாவது நடிக்க ட்ரை பண்ணுங்க பாஸ்னு சொல்லிட்டுப் போனார். நூறு பேர் பாராட்டினதைவிட அந்த விமர்சனம் பிடிச்சிருந்தது.
லிங்குசாமி - ஜோதிகாவை நீங்கள் சந்திக்காமல் இருந்திருந்தால்...?
சூர்யா - வாழ்க்கை இவ்வளவு அழகானது என்பது தெரியாமல் போயிருக்கும்.