ரஜினி, கமல் சாதனையை யாரும் பிரேக் பண்ண முடியாது - சூர்யா பேட்டி
, செவ்வாய், 24 செப்டம்பர் 2013 (10:03 IST)
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல் பேட்டி தருகிறார்கள் என்றுதான் தெரியும். முதல்நாள் சர்ப்ரைசாக சூர்யாவின் பேட்டி. எடுத்தவர் லிங்குசாமி. யார் எடுத்தால் என்ன, பேட்டி செம விறுவிறுப்பு. ஜெயா தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு முன், இங்கே உங்களுக்காக.
லிங்குசாமி - நீங்கள் அம்மா பிள்ளையா, அப்பா பிள்ளையா...?சூர்யா - வீட்டுக்கு நான்தான் முதல் பிள்ளை. எப்படி எஸ்கேப் ஆயிட்டேன் பார்த்தீங்களா.லிங்குசாமி - உங்கள் பெற்றோர் வீட்டில் அதிகம் செல்லம் தருவது உங்களுக்கா, உங்கள் தம்பி கார்த்திக்கா?சூர்யா - கார்த்திக்குதான் செல்லம். அவன் எப்போதும் அப்பா செல்லம்.லிங்குசாமி - ரஜினி, கமல் இரண்டு பேரும் இங்கே இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
சூர்யா - ரஜினிசாரும், கமல்சாரும் இருக்கிற சினிமாவில் அவங்களோட நானும் இருக்கிறேங்கிறதே பெருமையான விஷயம். சினிமாவுக்கு வர்ற எல்லோருக்குமே பென்ச் மார்க் அவங்க ரெண்டு பேரும்தான். அவங்க சாதனைகளை அவங்க உடைச்சாதான் உண்டு. வேற யாரும் பிரேக் பண்ணவே முடியாது. தலைக்கு ஏறாத வெற்றி, தளராத உழைப்பு இந்த இரண்டும்தான் அவர்களை உயரத்தில் வச்சிருக்கு.