ரஜினி கண்டிப்பாக வாழ்த்து சொல்வார் - கமல்ஹாசன் பேட்டி
, திங்கள், 27 ஜனவரி 2014 (09:38 IST)
இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் கமல்ஹhசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை கமல் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி.
பத்மபூஷண் விருது கிடைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?முன்பு சொன்ன அதே உணர்வுகள்தான் இப்போதும். இந்த விருதுக்கு தகுதியானவர்கள் இன்னும் காத்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இப்போது என் பெயரைப் பார்ப்பதில் பெருமை. எனக்கு வித்தை கற்றுக் கொடுத்தவர்கள், வாய்ப்பு கொடுத்து கைப்பிடித்து அழைத்து வந்தவர்கள்கூட இந்த விருதைப் பெறாமல் போய் சேர்ந்துவிட்டார்கள். செல்வங்கள் மட்டுமில்லை திறமைகளும் கொழிக்கும் நாடு இது. இனி செய்யப் போகும் வேலைகளுக்கு ஊக்கியாக இந்த விருது இருக்கும். இந்த பெருமைக்கு தகுதியுள்ளவனாக இனிதான் ஆக வேண்டும்.விருது என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. உங்கள் விஷயத்தில் எப்படி...?