இது வேற மாதிரி படம் - விக்ரம் பிரபு பேட்டி
, வெள்ளி, 13 டிசம்பர் 2013 (11:38 IST)
இன்று இவன் வேற மாதிரி ரிலீஸ். எல்லா இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் முதல் படத்தைவிட சவாலானது இரண்டாவது படம். இந்தப் படத்தை இயக்கிய சரவணனுக்கும், நடித்த விக்ரம் பிரபுக்கும் இது இரண்டாவது படம். விக்ரம் பிரபு அடக்கமாகப் பேசுகிறார், கடுமையாக உழைக்கிறார், தன்னம்பிக்கையோடு படங்களை செய்கிறார். வெற்றிகள் தொடரும் போதும் இந்த குணங்கள் அவரைவிட்டு விலகாது என்ற நம்பிக்கையை பிரஸ்மீட்டில் அவரது பேச்சு உணர்த்தியது.
எப்படி இந்தப் படம் உங்களுக்கு அமைந்தது?நான் முதல் வணக்கம் தெரிவிச்சுக்க விரும்புறது திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி சார், போஸ் சார். கும்கியில என்னை இன்ட்ரடியூஷ் பண்ணுனாங்க. கும்கி எந்த மாதிரி இம்பாக்டை தந்ததுன்னு தெரியும். அதுலயிருந்து மாறுபட்டு வேற மாதிரி படம் பண்ணணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். கும்கி படத்தோட ஆடியோ ரிலீஸ் அன்னைக்குதான் சரவணன் சாரைப் பார்த்தேன். போய் ஹாய் சொன்னேன். ஒரு வாரம் ஆகலை, சரவணன் சார் உங்களை மீட் பண்ணணும்னு சொன்னார் போய் பார்க்கறீங்களான்னு போஸ் சார் சொன்னார். அப்படிதான் இந்தப் படம் ஆரம்பிச்சது.இது எந்த மாதிரியான படம்?
இது வேற மாதிரியான படம். கும்கியிலயிருந்து முற்றிலும் வித்தியாசமான படம். சரவணன் சார்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம், ஸ்கிரின்ப்ஃளேயை ரொம்ப டைட்டா பண்ணியிருப்பார். எங்கேயும் எப்போதும் பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அமொpக்கன் ஸ்கூல் ஆஃப் திங்கிங்ல இருந்து வந்திருக்கேன். அங்க எப்போதும் ஸ்டோரி, ஸ்கிரின்ப்ளே பற்றிதான் பேசுவாங்க. அப்படி ஒருத்தரை பார்க்கும் போது உடனடியா ஒரு அட்டென்ஷன் எனக்ககு வந்தது. கண்டிப்பாக இந்தக் கதையை செய்யலாம்னு உடனே ஆரம்பிச்சோம். சன்டே அன்னைக்கு வொர்க் பண்ண மாட்டார். எனக்கும் சன்டேன்னா வீட்ல பேமிலியோட இருக்கணும். ஸோ அதுவும் ரொம்பப் பிடிக்கும்.