Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: விக்னேஸ்வரன் தகவல்

புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: விக்னேஸ்வரன் தகவல்

Webdunia
புதன், 1 ஜூன் 2016 (14:10 IST)
புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

 
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவுடன் புதிய கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு தகவல் வெளியானது.
 
இது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகையில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் என்னுடன் மிகவும் நட்பாகவே உள்ளார். அவருடன் நானும் நட்பில் உள்ளேன்.
 
மேலும், வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு சம்பந்தன் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே,  தமிழர்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்க வழிவகை செய்வதில் இருவரும் உறுதியாக உள்ளோம். இதனால், தற்போதைய சூழ்நிலையில் புதிய கட்சி தேவையில்லை என்றார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments