Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளத்தோணியில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 78 பேர் கைது

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2015 (05:26 IST)
ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தோணியில் செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 78 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
 

 
இலங்கையின் தெற்கே, கிரின்டா மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகம் அருகில் இருந்து கள்ளத் தோணியில் தமிழர்கள் மற்றும் சிங்களர் சிலர் ஆஸ்திரேலியா செல்ல முயன்றனர். அப்போது, அங்கு இலங்கை கடற்படையினர் திடீர் ரோந்து வந்தார். கள்ளத்தோணியில் செல்ல முயன்ற 78 பேரை கைது செய்த கடற்படையினர், அவர்களை காலே துறைமுக கடற்படை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
 
இலங்கை கடற்படையினரிடம் பிடிபட்டவர்களில், 78 பேரில், 59 பேர் தமிழர்கள் 19 பேர் சிங்களர்கள் ஆவார்கள். இலங்கை மக்களின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க, ஆஸ்திரேலியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments