Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழிந்த ஷூக்களை ஒட்டி விளையாடும் ஜிம்பாப்வே வீரர்கள்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (12:19 IST)
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வீரர் ரியான் பர்ல் வெளியிட்ட புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரு காலத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியாக இருந்தது. அந்த அணியில் இருந்து ஆண்டி பிளவர், கிராண்ட் பிளவர், ஹீத் ஸ்ட்ரீக் மற்றும் ஹென்றி ஒலங்கா போன்ற சர்வதேச தரம்மிக்க வீரர்கள் வந்தார்கள். ஆனால் அதன் பிறகு அந்த அணி காணாமல் போனது. இப்போது உப்புக்கு சப்பாணி அணியாகவே கிரிக்கெட் உலகில் இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த அணியின் வீரர் ரியான் பர்ல் சமிபத்தில் தனது கிழிந்த ஷூக்களை டிவிட்டரில் வெளியிட்டு ‘எங்களுக்கு மட்டும் ஸ்பான்சர் கிடைத்தால் ஒவ்வொரு சீர்ஸ் முடிந்ததும், இதுபோல கிழிந்த ஷூக்களை நாங்கள் ஒட்ட வேண்டி இருக்காது’ என கூறியிருந்தார். இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அந்த டிவீட்டை பகிர்ந்து வருகின்றனர். பலரும் அந்த அணி வீரர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். இதையடுத்து பூமா நிறுவனம் இப்போது ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments