Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினை வாழ்த்தினாரா கிண்டல் செய்தாரா? யுவ்ராஜ் சிங் சர்ச்சை டிவீட்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:55 IST)
அஸ்வின் 400 விக்கெட்களை எடுத்துள்ளதை அடுத்து அவருக்கு இந்திய வீரர்கள் எல்லாம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளிலிலேயே முடிந்து ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய சுழல்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் அக்ஸர் படேல் கலக்கினர்.

இந்த போட்டியில் அஸ்வின் தனது 400 ஆவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். 77 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்களை கைப்பற்றிய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக முத்தையா முரளிதரன் 72 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அஷ்வினின் இந்த சாதனைக் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் எல்லாம் பாராட்டி டிவீட் செய்து வருகின்றனர். இது தொடர்பாக டிவீட் செய்த யுவ்ராஜ் சிங் ‘இது போன்ற பிட்ச்களில் ஹர்பஜன் மற்றும் கும்ப்ளே ஆகியோர் பந்து வீசி இருந்தால் இந்நேரம் அவர்கள் 800 முதல்1000 விக்கெட்களை வீழ்த்தியிருப்பார்கள்’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments