எனக்கு தோனியோ கோலியோ ஆதரவு அளிக்கவில்லை – ஓய்வுக்குப் பின் மனம்திறந்த யுவ்ராஜ்!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (18:26 IST)
தான் விளையாடும் காலத்தில் தனக்கு ஆதரவு அளித்த கேப்டனாக சவுரவ் கங்குலி மட்டுமே இருந்தார் என யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் வெளிநாட்டுப் போட்டிகளிலாவது விளையாடலாம் என முடிவு செய்த அவர் கடந்த ஆண்டு இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தற்போது சில வெளிநாட்டு தொடர்களிலும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஆனால் இரண்டு உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த ஒரு வீரரை முறையான மரியாதை செலுத்தி ஓய்வு பெறவைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘நான் சவுரவ் கங்குலி தலைமையில் நிறைய விளையாடியுள்ளேன். அவர் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். ஆனால் அவரளவுக்கு நான் தோனி மற்றும் கோலி தலைமையில் ஆதரவைப் பெறவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments