Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையில் பங்கேற்க நிதியுதவி கேட்ட வீராங்கனைக்கு உதவியுள்ளார் உ.பி முதல்வர்

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (17:22 IST)
ஜெர்மனியில் நடக்கவுள்ள உலகக் கோப்பை தூப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உ.பியை சேர்ந்த பிரியா சிங் என்ற வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கியுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஜெர்மனியில் வரும் 22ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க உ.பியை சேர்ந்த பிரியா சிங் (19) என்ற வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவரால் பணம் செலவு செய்து ஜெர்மனிக்கு போக இயலவில்லை. ஏனென்றால் இவரது தந்தை ஒரு சாதாரண கூலித்தொழிலாளி.
 
இதனால் அவர் அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரியை சந்திப்பதற்காக இரண்டு முறை சென்றுள்ளார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. ஜெர்மனியில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதனால் போட்டியில் கலந்துகொள்ள நிதியுதவி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 
இந்நிலையில் அப்பெண்ணின் நிலைமை குறித்து அறிந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவருக்கு 4 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜெர்மனியில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள செல்லும் அப்பெண்ணுக்கு அனைத்து பயண உதவிகளையும் செய்து தரவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments