உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மழை வந்தால், டிரா ஆனால் யார் சாம்பியன்?

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (13:22 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணியினர் ஏற்கனவே லண்டன் சென்று விட்டனர் என்பதும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் மழை வந்தால் ஆட்டம் நின்ற நேரத்தில் கணக்கில் கொண்டு அந்த நேரங்கள் மட்டும் ரிசர்வ் நாளில் போட்டி நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் போட்டி டிராவில் முடிந்தால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் இரு அணிகளுமே சாம்பியன் பட்டம் பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
மற்ற தொடர்களில் இருப்பது போல் அதிக புள்ளிகள் எடுத்தது யார்? அதிக போட்டியில் வெற்றி பெற்றது யார் என்ற கணக்கு இதில் கணக்கிடப்படாது என்றும் போட்டி டிராவில் முடிந்தால் இரு அணிகளுமே வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

அடுத்த கட்டுரையில்
Show comments