Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய போட்டி.. மழை பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம்..!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (13:57 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி  தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தர்மசாலா மைதானத்தில் தற்போது மழை பெய்து வருவதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஆகி வருகிறது

மழை நின்றவுடன் டாஸ் போடப்பட்டு போட்டி ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்தால் ஓவர்கள் குறைக்கப்படுமா? அல்லது போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரை நடந்த போட்டிகளில் நெதர்லாந்து அணி  இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் விளையாட இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் நெதர்லாந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்படுமா அல்லது தாமதமாக தொடங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments