உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா நேவல் தோல்வி

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (21:25 IST)
உலக  பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா  நேவல் தோல்வியடைந்தார்.

 ஜப்பான் நாட்டின் தலை நகர் டோக்கியோவில் 27 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி   கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்கள் திறமையைக் காட்டி வருகின்றனர்.

இந்த தொடரில், 23 ஆம் தேதி  பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19,21-9 என்ற நேர்செட் கணக்கில் ஹாங்காங்கின் சியுங் நாகன் என்பவ்ரை தோற்கடித்து, 2 வது சுற்றில் நுழைந்தார்.

2 வது சுற்று நடக்கும் முன் ஜப்பான் வீராங்கனை நொசோமி காயம் காரணமாக விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சாய்னா நேவால்,  தாய்லாந்து வீராங்கனை புசானன் உடன் மோதினார். இத்ல், புசானன் 21-17, 16-21,21-13 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments