Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் பிரீமியர் லீக் லோகோ இதுதான்: பிசிசிஐ வெளியீடு..!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (18:20 IST)
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது என்பதும் அதற்காக ஐந்து அணிகள் தேர்வு செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அது மட்டும் இன்றி ஐந்து அணிகளுக்கான வீராங்கனைகளின் ஏலமும் இன்று நடைபெற்றது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் பிசிசிஐ மகளிர் ஐபிஎல் போட்டிக்கான லோகோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த லோகோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
இன்றைய ஏலம் தொடங்குவதற்கு முன்னர் பிசிசி தலைவர் ரோஜர் பின்னி செயலாளர் ஜெய்ஷா ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோர் இந்த லோகவை வெளியிட்டுள்ளனர். இந்த லோகோ அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கும் ஐந்து அணிகளுக்கு 30 வெளிநாட்டு வீராங்கனைகள் மற்றும் 60 உள்நாட்டு வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அகமதாபாத் பெங்களூர் டெல்லி லக்னோ மற்றும் மும்பை ஆகிய ஐந்து அணிகள் முதலாவது ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments