Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலிடத்தை தக்கவைக்க முயற்சிப்பேன்: சானியா மிர்சா

முதலிடத்தை தக்கவைக்க முயற்சிப்பேன்: சானியா மிர்சா
, திங்கள், 20 ஏப்ரல் 2015 (09:42 IST)
இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பிடித்த நம்பர் ஒன் இடத்தை நீண்டகாலம் தக்கவைக்க முயற்சி செய்வேன் என்று சானியா மிர்சா கூறியுள்ளார்.
 

 
பெட் கோப்பை டென்னிஸ் போடிகள் ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சானியா மிர்சா தலைமையிலான இந்திய அணி பங்கேற்று பிலிப்பைன்சை வென்றது. இதனால் இந்திய அணி குரூப் 1 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
 
இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில், இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் என்ற மகுடத்தை வென்ற பிறகு உற்சாகமாக விளையாடியுள்ளேன். பல இளம் வீரர்கள் ஆட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகின்றனர். மேலும் என்னுடைய ஓய்வு முடிவு குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. டென்னிசில் பெற்ற நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்க போதிய முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil