Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவின் தொடர் தோல்வியை காப்பாற்றுகிறதா மழை?

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (19:56 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது. இன்றைய போட்டியில் அந்த அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதுகிறது.
 
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 6 ரன்களிலும் அதனையடுத்து மார்க்கம் 5 ரன்களிலும் அவுட் ஆனதால் 7.3 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
 
இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்ட போட்டி தற்போது மதியம் 3.30 ஆகியும் இன்னும் போட்டி தொடங்கவில்லை. தொடங்குவதற்கான அறிகுறியும் தெரியவில்லை என்றும் வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
ஒருவேளை மழை நின்று, விளையாடுவதற்கு ஏதுவாக மைதானம் இருப்பதாக நடுவர்கள் முடிவு செய்தால் ஓவர் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்படும். இல்லையேல் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டி ரத்தானால் தென்னாபிரிக்கா தனது முதல் புள்ளியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதே தொடரில் இலங்கை-பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments