Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி சதம் வீண்; இந்தியா போராடி தோல்வி

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (21:28 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி 'டை'யிலும் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்தது. ஹோப் 95 ரன்களும், நர்ஸ் 40 ரன்களும், ஹெட்மியர் 37 ரன்களும் எடுத்தனர்.

284 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் விக்கெட்டை 2வது ஓவரிலேயே இழந்தாலும் கேப்டன் விராத் கோஹ்லி அருமையாக விளையாடி சதமடித்தார். அவர் 107 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அதன்பின்னர் சொற்ப ரன்களில் விக்கெட்டுக்கள் வரிசையாக விழுந்ததால் இந்திய அணி இறுதியில் 47.4 ஒவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments