Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைக்க கூடாது: ஹர்பஜன் சிங்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:04 IST)
இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சரியாக செயல்படாததை தொடர்ந்து ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
 
முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படு மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஹர்பஜன் சிங் ஆல்ரவுண்டர் என்ற அழைக்கப்படும் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
பாண்டியா பேட்ஸ்மேனாக அதிகம் ரன்களை குவிக்கவில்லை. அவரது பந்துவீச்சின் மீதும் கேப்டனுக்கு நம்பிக்கை இருப்பது போல் தெரியவில்லை. அவர் இதே நிலையில் தொடர்ந்து பந்து வீசினால் வருங்காலத்தில் அணியில் தேர்வாவது கடினம்.
 
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் போல் சிறப்பான ஆட்டத்தை நாம் பாண்டியாவிடம் எதிர்பார்த்தோம். ஆனால், அவர் ஓவர் நைட்டில் கபில் தேவ் ஆக முடியவில்லை. எனவே, அவரை நாம் ஆல்ரவுண்டர் என அழைப்பதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments