Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’இனிமேல் நாங்கள் மன்னிப்பு கோர முடியாது’ - ரோஹித் சர்மா

’இனிமேல் நாங்கள் மன்னிப்பு கோர முடியாது’ - ரோஹித் சர்மா
, திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (14:42 IST)
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட புறப்பட்டு சென்றது. அப்போது இந்திய வீரர் ரோஹித் சர்மா, இனிமேல் நாங்கள் மன்னிப்பு கோர முடியாது என்று கூறியுள்ளார்.
 

 
கடந்த காலங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா  ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தொடர்ந்து பெரும் தோல்விகளையே சந்தித்தது.

இந்நிலையில், இது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், ”2013ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பிறகு நடந்த டெஸ்ட் போட்டிகள் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. எதுவாயினும், இரண்டு ஆண்டுகள் நடந்து முடிந்த அந்த தொடர்கள் முழுவதிற்கும், நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளதான் வேண்டும்.
 
நாங்கள் எவ்வளவு தூரம் முன்னேறிச் சென்று, சவாலுக்குத் தயாராக இருந்தோம் என்பது அழகாக தெரிந்தது. நாங்கள் இப்போது கற்றுக்கொண்டுள்ளோம். இனிமேல், நாங்கள் எந்த மன்னிப்பையும் கோர முடியாது. தற்போதுள்ள நிலையில், நாங்கள் போதுமான அளவு அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம்.
 
இந்திய துணைக்கண்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளோம். இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. நிறைய இளம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி எப்பொழுதும் நேர்மறையான நோக்கம் கொண்டிருப்பதை காண முடிகிறது.
 
அணியில் உள்ள அனைத்து வீரர்களும் 10க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். எனவே, இனிமேல் நாங்கள் எந்த மன்னிப்பையும் கோர முடியாது” என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil