Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மான்செஸ்டர் விமான நிலையத்தில் அவமானப் படுத்தப்பட்டேன் – வாசிம் அக்ரம் குற்றச்சாட்டு !

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (11:45 IST)
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் மான்செஸ்டர் விமானநிலையத்தில் அதிகாரிகள் அவரை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் நீரிழிவு நோயாளி என்பதால் அவர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இருந்தே இன்சுலின் ஊசிகளைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் தன்னோடு எப்போதும் இன்சுலின் ஊசிகளை கையில் வைத்திருப்பார். இந்நிலையில் அவர் மான்செஸ்டர் விமானநிலையத்தில் இது சம்மந்தமாக அவமானப்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

’மான்செஸ்ட்ர் விமான நிலைய அதிகாரிகள் என்னுடைய இன்சுலின் பெட்டியை எடுத்து பிளாஸ்டிக் கவரில் வைக்க சொல்லி இழிவாகப் பேசினர்’ என அவரது டிவிட்டில் புகார் அளிக்க,உடனடியாக பதிலளித்த மான்செஸ்டர் விமான நிலைய நிர்வாகம் ’ எங்கள் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததற்கு நன்றி. எங்களுக்கு நேரடியாக இந்த புகாரை அனுப்ப முடியுமா? ஆகவே நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்’ எனக் கூறியுள்ளது.

அதற்கு வாசிம் அக்ரம் ‘உங்களது உடனடி பதிலுக்கு மிக்க நன்றி. உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments