Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மான்செஸ்டர் விமான நிலையத்தில் அவமானப் படுத்தப்பட்டேன் – வாசிம் அக்ரம் குற்றச்சாட்டு !

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (11:45 IST)
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் மான்செஸ்டர் விமானநிலையத்தில் அதிகாரிகள் அவரை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் நீரிழிவு நோயாளி என்பதால் அவர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இருந்தே இன்சுலின் ஊசிகளைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் தன்னோடு எப்போதும் இன்சுலின் ஊசிகளை கையில் வைத்திருப்பார். இந்நிலையில் அவர் மான்செஸ்டர் விமானநிலையத்தில் இது சம்மந்தமாக அவமானப்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

’மான்செஸ்ட்ர் விமான நிலைய அதிகாரிகள் என்னுடைய இன்சுலின் பெட்டியை எடுத்து பிளாஸ்டிக் கவரில் வைக்க சொல்லி இழிவாகப் பேசினர்’ என அவரது டிவிட்டில் புகார் அளிக்க,உடனடியாக பதிலளித்த மான்செஸ்டர் விமான நிலைய நிர்வாகம் ’ எங்கள் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததற்கு நன்றி. எங்களுக்கு நேரடியாக இந்த புகாரை அனுப்ப முடியுமா? ஆகவே நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்’ எனக் கூறியுள்ளது.

அதற்கு வாசிம் அக்ரம் ‘உங்களது உடனடி பதிலுக்கு மிக்க நன்றி. உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments