Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் ஜெயிச்சிருந்தா சம்பவமே வேற! – தோல்வி குறித்து விராட் கோலி!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (09:05 IST)
நியூஸிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ”இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. டாஸ் வெல்ல முடியாததே அனைத்திற்கும் ஆரம்பமாக அமைந்து விட்டது. இந்த ஆட்டத்தில் மயங்க் மற்றும் ரஹானே தவிர பேட்டிங்கில் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பந்துவீச்சாளர்களும் மிகவும் சுமாராகவே ஆடினார்கள். நியூஸிலாந்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது அந்த அணியின் கடைசி 3 வீரர்கள் பெரும் நெருக்கடியை கொடுத்தார்கள்.

இந்த தோல்விக்காக மக்கள் எங்களை பேசலாம். ஆனால் எப்போது ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. எதிரணியும் வெற்றி பெரும் நோக்கில்தான் விளையாட வருகிறார்கள். வெளியாட்கள் என்ன சொல்வார்கள் என நினைத்து பார்க்க தொடங்கினால் எந்த ஆட்டத்தையும் சிறந்த முறையில் எதிர்கொள்ள முடியாது. இந்த தோல்வியிலிருந்து விரைவில் மீண்டு வருவோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments