Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருமே அந்த தோல்விக்குப் பின் நம்மை நம்பவில்லை – வெற்றிக்கு பிறகு கேப்டன் கோலி பதிவு!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (16:16 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இந்தியாவில் இருக்கும் கேப்டன் கோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றிக்கு 321 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த சிட்னி டெஸ்ட் போலவே இந்த போட்டியையும் இந்திய அணி ட்ரா செய்ய முயலும் என நினைத்த ஆஸ்திரேலியாவுக்கு பேரிடியாக இந்திய அணி அதிரடியாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி மீண்டும் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் கேப்டன் விராட் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘என்ன ஒரு வெற்றி… அடிலெய்ட் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் அனைவரும் நம்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். தன்முனைப்பும் ஒற்றுமையுமே வெற்றிக்குக் காரணம். வீரர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் வாழ்த்துகள். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியைக் கொண்டாடுவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments