Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுபோன்ற போட்டிகள் ஆபத்தானவை – அதிருப்தியை வெளிப்படுத்திய கோஹ்லி !

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (08:49 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் தனது அதிருப்தியை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகளையும் விளையாடி வருகின்றன. நடந்து முடிந்த டி 20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதையடுத்து முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடக்க இருந்த நிலையில் போட்டி மழைக் காரணமாக 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. பின்னர் மழை விட்ட பிறகு வீரர்கள் இறங்குவதும் மழை வருவதுமாக தொடர 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

இதையடுத்து ஊடகங்களிடம் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி , ‘கிரிக்கெட்டில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் மழையினால் இறங்குவதும் பிறகு போவதுமாக இருக்கும் ஆட்டங்களே. இதுபோன்ற போட்டிகளால் வீரர்கள் களம் வழுக்கும் தன்மையுடையதாக மாறும். எனவே வீரர்கள் காயம்படவே வாய்ப்புகள் அதிகம்.  மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்களில் களமிறங்குவதும் பிறகு திரும்பிப் போவதுமான நிலை இருப்பது மிகவும் ஆபத்தானது.’ எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments