Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பவுலர்கள் எங்களை விட திறமையானவர்களாக இருக்க வேண்டும் – உமேஷ் யாதவ் கருத்து !

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (09:02 IST)
இந்திய அணியில் தேர்வாக இளம்வீரர்கள் அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்களை விட திறமையானவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானத் தொடரை வென்றுள்ளது. இந்த வெற்றியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி அசத்தியுள்ளார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் நிரந்தரமான வாய்ப்புக் கிடைப்பதில்லை. சுழற்சி முறையில்தான் வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது.

இது குறித்து மனம் திறந்து பேசியுள்ள உமேஷ் ‘அணியில்  40க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பவுலர்களே 7க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதனால் இளம் வீரர்கள் அணிக்குள் வரவேண்டுமானால் அவர்கள் எங்களை விட சிறந்தவர்களாக இருந்தால்தான் முடியும். அனைத்துப் போட்டிகளிலும் நான் ஆடுவேனா என்பது என் கைகளில் இல்லை. அணிக்குள் ஆரோக்யமானப் போட்டி நிலவுகிறது.

நான் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத போது இந்தியா ஏ அணியில் தேர்வு செய்தனர். அதனால் எப்போதும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில்  என்னவெல்லாம் போட்டிகளில் வாய்ப்பிருக்கிறதோ என்னைத் தேர்வு செய்யுங்கள் எனக் கூறினேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments