Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிஸ் ஹெட் சதம்…வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (12:00 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸி முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் பாரம்பரியம் மிக்க ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில்  மூன்றை வென்ற ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இதையடுத்து ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று ஹோபர்ட்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதையடுத்து ஆஸி அணியில் ஒரு புறம் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தாலும், அந்த அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் நிதானமாக ஆடி சதமடித்தார். இதனால் ஆஸி அணி 303 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து உணவு இடைவேளைக்கு முன்னர் 2 விக்கெட்களை இழந்து 34 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments