Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலில் அரையிறுதியே குறிக்கோள்- சென்னை கேப்டன் தோனி

முதலில் அரையிறுதியே குறிக்கோள்- சென்னை கேப்டன் தோனி
, வியாழன், 17 ஏப்ரல் 2014 (12:32 IST)
ஐபிஎல். கிரிக்கெட் கோப்பையை இருமுறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, இந்த ஐபிஎல் தொடர் சவால் நிறைந்தது ஏனெனில் இது அரபு நாட்டில் நடப்பதால் வெயில் மற்றும் காற்றின் ஈரப்பசை ஆற்றலை வெகுவாக உறிஞ்சி விடும் என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியதாக ஐபிஎல். கிரிக்கெட் அதிகாரபூர்வ இணையதளத்தில் தோனி கூறியிருப்பதாவது:
 
தட்பவெப்ப சூழ்நிலை வித்தியாசமானது, சென்னை, கொல்கட்டா, அல்லது மும்பை போல் இங்கு இருக்காது, கடும் வெயில் மற்றும் காற்றில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும், டெல்லி போன்று ஒரு வறண்ட உஷ்ணம் அதுதான் இதற்கும் பொருந்தும் என்று கூறலாம். விளையாடத் தொடங்கிவிட்டால் போகப்போக இதெல்லாம் ஒன்றும் தெரியாது.
 
"சீராக ஆடுவது, முதலில் அரையிறுதியில் நுழைவதுஏ குறிக்கோள், பிறகு நாக் அவுட் கட்டத்தில் ஆட்டத்திறனை கொஞ்சம் அதிகப்படுத்துவது அவசியம்.
 
இவ்வாறு கூறினார் தோனி.

Share this Story:

Follow Webdunia tamil