நேற்று தோனி போல விளையாடிய டாம் கரண் – இது பாராட்டா ? கேலியா?

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (10:37 IST)
ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடந்து முடிந்தது.

இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 174 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மோர்கன் ரஸ்ஸல் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்த ரன்களை எட்டியது. அதையடுத்து எளிதான இலக்கு என நினைத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே ஷாக்காக அமைந்தது.

ஆட்டம் ஆரம்பம் முதல் விக்கெட் விழ அந்த அணியின் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருந்தது. ஒரு முனையில் விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுனையில் ஆல் ரவுண்டர் டாம் கரன் மட்டும் நிலைத்து நின்று ஆடி வந்தார். ஆனால் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் 19 வது ஓவரில் நரேன் பந்தில் 3 சிக்சர்களை விளாசி அரைசதம் அடித்தார். இந்த அதிரடியான ஆட்டத்தை அவர் முதலிலேயே விளையாடி இருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் நிதானமாக விளையாடிவிட்டு கடைசிக் கட்டத்தில் சிக்ஸர்களை விளாசி தோனி போல அரைசதம் அடித்து விட்டார் என ரசிகர்கள் அவரைக் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments