Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடராஜன் ஓவரில் பிரித்து மேய்ந்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்: 2 ஓவரில் 21 ரன்கள்

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (20:26 IST)
நடராஜன் ஓவரில் பிரித்து மேய்ந்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்
ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியான இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து தற்போது கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது
 
தொடக்க ஆட்டக்காரரான ராணா மற்றும் கில் களமிறங்கிய நிலையில் 15 ரன்களில் ரஷித்கான் பந்தில் கில் அவுட்டானார். இந்த நிலையில் ராணாவுடன் தற்போது ராகுல் திரிபாதி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை கொல்கத்தா அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக காணப்பட்ட நடராஜன் இன்றைய போட்டியில் பந்து வீச்சில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பந்துவீச்சில் 2 ஓவர்களில் 21 ரன்கள் அடித்து கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் பிரித்து மேய்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புவனேஷ் குமார், ரஷித்கான் மற்றும் நபி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments