Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 4வது டெஸ்ட் போட்டி: தொடரை சமன்செய்யுமா இந்தியா?

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (06:51 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்தியா வென்றால் தொடர் சமனாகும். இங்கிலாந்து வென்றால் அந்த அணி தொடரை வெல்லும். எனவே இந்த போட்டியை வெல்ல இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன

ஏற்கனவே நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் முரளிவிஜய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவருக்கு பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முரளி விஜய் முதல் டெஸ்ட் போட்டியில் 20 மற்றும் 6 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் குல்தீப் யாதவ் எதிர்பார்த்தபடி விக்கெட்டுக்களை வீழ்த்தாததால் அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments