Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை கைப்பற்றுவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று பலப்பரிட்சை

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (08:30 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் இன்று டெல்லியில் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது
 
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு தீவிரமாக விளையாடும்
 
இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கேப்டன் கோலி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். மேலும் இன்றைய போட்டியில் தோனி களமிறங்குவார் என தெரிகிறது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல ஃபார்மில் உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்றைய போட்டியில் விராத் கோஹ்லி, தவான், ரோஹித் சர்மா, ராயுடு, ராகுல், தோனி, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், ஷமி, விஜய் சங்கர், ஆகியோர் விளையாடும் 11 பேர் அணியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments